வயல்கள் அதிகம் இருந்த ஊரிலிருந்து வந்தவனை
மெயின் கிராஸ் களாலான பெங்களூருக்கு
அறிமுகம் செய்தேன்.
சகதி நிறைந்த மார்கெட்,
வாழை இலை நறுக்கி விற்கப்படும் சந்தை
கற்களால் செய்த நடைபாதைகள் வழியாக
போக வேண்டிய இடத்திற்கு கூட்டிச் சென்றேன்.
பார்த்துப் போ, கவனமாய் இரு, சொல்லிட்டுச் செய்,
என்று நான் கூரியதெல்லாம் அவன் காதில் விழுந்தாய்
தெரியவில்லை. இந்த நகரம் ஒரு பெரிய இயந்திரமாய்,
அதன் உள்ளே ஓடும் சக்கரங்கள் அவனை ஈர்ப்பதாய்
கை நீட்டிப் போனான்.
ஏதோ ஒரு நகருக்கு நானும் இப்படி அடிமையானதை
நினைத்து எனக்குள் சிரித்தேன். அவனைப் பற்றி பிறகு
நான் நினைக்கவில்லை.
நான் கடிந்ததற்காய் இன்றும் என்னிடம் சொல்லிவிட்டுப்
போகிறான் ஊருக்கு. நகரத்தை விட்டுப் பிரியும்போது
மட்டும் நான் சொன்னதெல்லாம் அவனுக்குள்
எதிரொலிக்கிறதோ என்னவோ.
உனக்கு இவனை தாரை வார்த்து விட்டேன். பார்த்துக்கொள்.
Monday, December 14, 2009
Wednesday, October 7, 2009
நீ ஊருக்குப் போ
... என்று அதட்டினாள் அழுது
அடம் பிடித்தவளைப் பார்த்து.
சாப்பிட, தூங்க, சட்டை போட என்று
ஒவ்வொரு முறையும் குறும்புக்கு இதே
மிரட்டலாய் சொல்லப்பட்டது.
நான்கு சுவர் தாண்டி ஓடி விளையாடட்டும்
பாவம், அவளுக்கு இங்க என்ன செய்யனும்னே
தெரியலை என்று காரணம் காட்டப்பட்டது.
பயணச்சீட்டு, கூட்ட நெரிசல் என, எல்லாம்
யோசித்து, நாள் குறித்தாயிற்று.
யார் எங்கே எப்போது பார்த்துக் கொள்ள
வேண்டுமென்று அட்டவனையிட்டு அறிவித்தாயிற்று.
குறித்த நாளுக்கு முன்னிரவு.
ஏங்க அவளை அனுப்பித்தான் ஆகனுமா ...
என்று இழுத்தாள், மகளைப் பிரிய முடியாமல்.
அடம் பிடித்தவளைப் பார்த்து.
சாப்பிட, தூங்க, சட்டை போட என்று
ஒவ்வொரு முறையும் குறும்புக்கு இதே
மிரட்டலாய் சொல்லப்பட்டது.
நான்கு சுவர் தாண்டி ஓடி விளையாடட்டும்
பாவம், அவளுக்கு இங்க என்ன செய்யனும்னே
தெரியலை என்று காரணம் காட்டப்பட்டது.
பயணச்சீட்டு, கூட்ட நெரிசல் என, எல்லாம்
யோசித்து, நாள் குறித்தாயிற்று.
யார் எங்கே எப்போது பார்த்துக் கொள்ள
வேண்டுமென்று அட்டவனையிட்டு அறிவித்தாயிற்று.
குறித்த நாளுக்கு முன்னிரவு.
ஏங்க அவளை அனுப்பித்தான் ஆகனுமா ...
என்று இழுத்தாள், மகளைப் பிரிய முடியாமல்.
கரடி பொம்மை
அப்பொழுதெல்லாம் அவள் இடுப்பிலேயே கிடந்த
அந்த கரடி பொம்மை, ஒரு நீண்ட விடுமுறைக்குப்
பின் அடையாளம் மறந்து விசில், ஆட்டோ,
புத்தகங்களுக்கு மத்தியில் சாமானியமாய் கிடந்தது.
எனக்கு தான் ஏனோ பொக்கென்று
இருந்தது அதை பார்க்க.
அந்த கரடி பொம்மை, ஒரு நீண்ட விடுமுறைக்குப்
பின் அடையாளம் மறந்து விசில், ஆட்டோ,
புத்தகங்களுக்கு மத்தியில் சாமானியமாய் கிடந்தது.
எனக்கு தான் ஏனோ பொக்கென்று
இருந்தது அதை பார்க்க.
Tuesday, July 28, 2009
மூனு இலைக்கு மேல்
வாழ்க்கை கோடுகள் கூட வந்தவர்களிடமிருந்து
தள்ளி கூட்டி வந்து விட்டது
ஒன்றாய் சைக்கிள் ஓட்டிய போது அவனுக்கும்
எனக்கும் ஏதும் வித்தியாசம் இருப்பதாய் தோண்றவில்லை
இப்பொழுது தள்ளி இருக்கிறான்
மனதில் பதிந்த அந்த முகம் வேறு எங்கோ நகர்ந்து
கொண்டிருக்கிறது.
எப்பொழுதுமே ஏதாவது சொல்ல முடிந்த நாட்கள்
போய் அவன் வாழ்க்கையை பற்றி ஒன்றுமே
புரியாது பார்கிறேன். அவனைச் சுற்றி தேவைகள்
மொத்தமாய் வேறாய்.
எங்கள் கோடுகள் தள்ளி வந்து விட்டது.
அவனுக்கு மகளில்லை, என் வீட்டில் வேலைக்குப்
போகிறார்கள். நான் இங்கே கால் ஊன்ற நினைக்கிறேன்.
முளைத்து மூன்று இலைக்கு மேல் நிச்சயமாய்
பார்க்க நிறைய இருக்கிறது.
ஒரு இலைக்கு பத்து வருட கணக்காயிருக்க வேண்டும்.
தள்ளி கூட்டி வந்து விட்டது
ஒன்றாய் சைக்கிள் ஓட்டிய போது அவனுக்கும்
எனக்கும் ஏதும் வித்தியாசம் இருப்பதாய் தோண்றவில்லை
இப்பொழுது தள்ளி இருக்கிறான்
மனதில் பதிந்த அந்த முகம் வேறு எங்கோ நகர்ந்து
கொண்டிருக்கிறது.
எப்பொழுதுமே ஏதாவது சொல்ல முடிந்த நாட்கள்
போய் அவன் வாழ்க்கையை பற்றி ஒன்றுமே
புரியாது பார்கிறேன். அவனைச் சுற்றி தேவைகள்
மொத்தமாய் வேறாய்.
எங்கள் கோடுகள் தள்ளி வந்து விட்டது.
அவனுக்கு மகளில்லை, என் வீட்டில் வேலைக்குப்
போகிறார்கள். நான் இங்கே கால் ஊன்ற நினைக்கிறேன்.
முளைத்து மூன்று இலைக்கு மேல் நிச்சயமாய்
பார்க்க நிறைய இருக்கிறது.
ஒரு இலைக்கு பத்து வருட கணக்காயிருக்க வேண்டும்.
Sunday, June 28, 2009
கேட்டதில் பிடித்தது
தானாய் கிடைத்த அன்பில் என்ன அம்மா சுகம் இருக்கிறது;
போரடிக்கிடைத்த அன்பில் தானே சுகம்.
1960 களில் வந்த தமிழ் திரைப்படத்தின் வசனம் இது.
இதை விட தமிழனின் கலாச்சாரத்தை சுருக்கமாய் சொல்ல முடியாது .
மேற்கத்திய சிந்தனைகள், வெற்றி என்பதை முன்னிருத்தினாலும்,
அன்பை வெல்லுவதை சொல்வதாய் நான் இதுவரை பார்கவில்லை.
போரடிக்கிடைத்த அன்பில் தானே சுகம்.
1960 களில் வந்த தமிழ் திரைப்படத்தின் வசனம் இது.
இதை விட தமிழனின் கலாச்சாரத்தை சுருக்கமாய் சொல்ல முடியாது .
மேற்கத்திய சிந்தனைகள், வெற்றி என்பதை முன்னிருத்தினாலும்,
அன்பை வெல்லுவதை சொல்வதாய் நான் இதுவரை பார்கவில்லை.
Wednesday, May 20, 2009
தெருநங்கை
நாம் பார்க்காத நிழல்களில் இயங்கும் உலகின் ஒரு பரிமாணம் என்னைத் தொட்டுச் சென்றது. சட்டத்தின் விளிம்புகளில் வரையரைக் கோடுகள் அவ்வளவு நேர்தியாய் இருப்பதாய் தெரியவில்லை.
பெங்களூர், கம்பெனி வண்டிகள் மாலை வேலை முடித்துத் திரும்பும் போது சில்லரை சேர்க்கப் பொது மக்களை ஏற்றுவது வாடிக்கை. மழைக் குளிரில் அவசரமாய் கிடைத்த வண்டியில் அமர்ந்தேன். 11 மணி நேரப்பயணம் தந்த இறுக்கம், இன்னும் சிறிது நேரத்தில் வீடு என்ற லேசான சந்தோஷம். யாரோ அவர் தொழிலாளர்க்குச் செய்து கொடுத்த சொகுசு நான் இன்று அனுபவிப்பதாய் எனக்குள் உருத்தல்.
முழுவதுமே ஆண்களாய், அமைதியாய் 10 பேர், இப்போது கிளம்பிவிடும் வண்டி என்று அவரவர் சிந்தனை உலகத்தில் எல்லோரும் சென்றாகிவிட்டது. என்னருகே ஒரு காலி இடம்.
மலர்ச்சியாய் ஏறினாள் அந்த திருநங்கை. நேராய் வந்தமர்ந்தாள் என்னருகே. மனிதராய் பாருங்கள் என்றும், சொல்ல முடியாத துன்பம் தாங்குகிறார்கள் என்றும் பரிதாப அலைகள் அதிகம் வீசும் காலத்தில், இயல்பாய் தானிருந்தேன். அவளுக்கு இடப்பக்கம் நானிருக்க, வலப்பக்கம் இருந்தவன் தோளில் சாய்ந்தாள். ஆர்வமாய் சில கேள்விகள் கேட்டாள். சற்று தயங்கி பின் பதில் சொன்னான்.
எழுந்து கொள்ளலாமா என்று யோசித்து சிறிது தயங்கினேன், நான் நினைத்ததாய் இல்லாமல் போனால் அது காயப்படுத்துமே என்று. என் முறை வந்தது. என் தோளும் சரி பார்க்கப்பட்டது. என் மலிவு விலைச் சட்டை நன்கிருப்பதாய் பாரட்டப்பட்டது. எதற்கும் பதிலலிக்காமலிருந்ததால் என் மொழி என்னவென்று விசாரித்தாள். தெலுங்கா, ஹிந்தியா, கன்னடாவா, தமிழா, ஆங்கிலமா, உருதுவா ... அவள் கடைசியாய் கேட்ட மொழி எது என்று புரியவில்லை. மெளனம் காத்தேன். இன்னும் வீடு வர நேரமிருப்பதால் எழுந்து தூரப்போய் நின்றேன்.
சிறிது நேரத்தில் அவள் இறங்கும் இடம் வந்தது, என்னை கடந்து செல்லும் போது வருகிறேன் என்றாள் புன்னகைத்தபடி. சங்கடம் விலகியதாய் ஆசுவாசமானேன். வருத்தமாய் இருந்தது.
பெங்களூர், கம்பெனி வண்டிகள் மாலை வேலை முடித்துத் திரும்பும் போது சில்லரை சேர்க்கப் பொது மக்களை ஏற்றுவது வாடிக்கை. மழைக் குளிரில் அவசரமாய் கிடைத்த வண்டியில் அமர்ந்தேன். 11 மணி நேரப்பயணம் தந்த இறுக்கம், இன்னும் சிறிது நேரத்தில் வீடு என்ற லேசான சந்தோஷம். யாரோ அவர் தொழிலாளர்க்குச் செய்து கொடுத்த சொகுசு நான் இன்று அனுபவிப்பதாய் எனக்குள் உருத்தல்.
முழுவதுமே ஆண்களாய், அமைதியாய் 10 பேர், இப்போது கிளம்பிவிடும் வண்டி என்று அவரவர் சிந்தனை உலகத்தில் எல்லோரும் சென்றாகிவிட்டது. என்னருகே ஒரு காலி இடம்.
மலர்ச்சியாய் ஏறினாள் அந்த திருநங்கை. நேராய் வந்தமர்ந்தாள் என்னருகே. மனிதராய் பாருங்கள் என்றும், சொல்ல முடியாத துன்பம் தாங்குகிறார்கள் என்றும் பரிதாப அலைகள் அதிகம் வீசும் காலத்தில், இயல்பாய் தானிருந்தேன். அவளுக்கு இடப்பக்கம் நானிருக்க, வலப்பக்கம் இருந்தவன் தோளில் சாய்ந்தாள். ஆர்வமாய் சில கேள்விகள் கேட்டாள். சற்று தயங்கி பின் பதில் சொன்னான்.
எழுந்து கொள்ளலாமா என்று யோசித்து சிறிது தயங்கினேன், நான் நினைத்ததாய் இல்லாமல் போனால் அது காயப்படுத்துமே என்று. என் முறை வந்தது. என் தோளும் சரி பார்க்கப்பட்டது. என் மலிவு விலைச் சட்டை நன்கிருப்பதாய் பாரட்டப்பட்டது. எதற்கும் பதிலலிக்காமலிருந்ததால் என் மொழி என்னவென்று விசாரித்தாள். தெலுங்கா, ஹிந்தியா, கன்னடாவா, தமிழா, ஆங்கிலமா, உருதுவா ... அவள் கடைசியாய் கேட்ட மொழி எது என்று புரியவில்லை. மெளனம் காத்தேன். இன்னும் வீடு வர நேரமிருப்பதால் எழுந்து தூரப்போய் நின்றேன்.
சிறிது நேரத்தில் அவள் இறங்கும் இடம் வந்தது, என்னை கடந்து செல்லும் போது வருகிறேன் என்றாள் புன்னகைத்தபடி. சங்கடம் விலகியதாய் ஆசுவாசமானேன். வருத்தமாய் இருந்தது.
Tuesday, May 12, 2009
ரோமியோ
அவனுக்கென்ன...
கலைத்துப் போட்டு பார்க்கிறான் வாழ்கையை.
பிடிக்காத போது, தொலை தூரம் செல்கிறான்
பழகாத முகம் பார்த்து நட்பு வளர்கிறான்.
இதில் சில நாள் அதில் சில நாள் என
செளகரியத்திற்கு வார்த்துப் போடுகிறான் அவன் நாட்களை
கவிதை பாட என்று ஒரு காலை
அமைதி அனுபவிக்க ஒரு குளக்கரை
அயர்ந்து தூங்க ஒரு மரக்கிளை
புல்லாங்குழல் வாசிக்க ஒரு இடம்.
தச்சு வேலை செய்ய ஒரு வீடு
ஓவியம் தீட்ட சில முகங்கள்
ஆருடம் சொல்ல சில கவலைக்காரர்கள்
விளையாட சில தோழர்கள்
வஞ்சமென்றும், கோபமென்றும் பார்க்காத விரதம் இல்லை
தட்டிக் கேட்டு சண்டை பயிலவும் சில முரட்டுக் கைகள்
வளர எந்த உந்தலுமில்லை, ஆயினும்
முதிர போகும் பயணமிது
பல வாசங்கள் முகர்ந்து பார்க்க
விளையாட்டுக்கு திரியும் இளங்கன்று போல்
எல்லாமே சொந்தம்.
உறவு வளர பயமில்லை முதல் காதல் போல்
இரவெல்லாம் கண்விழித்து
புன்னகை தரிக்கிறான்.
பிரிந்த போது கண்ணீர் சிந்தி பறக்கிறான்.
எங்கோ சென்று ஏதோ செய்ய
சுதந்திரம். மண்ணில் நட்டு வைக்கவில்லை
எதையும். காற்றில் அலையும் காகிதம்.
சுகம் மட்டும் தேடும் சுகவாசி.
மிடுக்காய் அலையும் சன்னியாசி.
கலைத்துப் போட்டு பார்க்கிறான் வாழ்கையை.
பிடிக்காத போது, தொலை தூரம் செல்கிறான்
பழகாத முகம் பார்த்து நட்பு வளர்கிறான்.
இதில் சில நாள் அதில் சில நாள் என
செளகரியத்திற்கு வார்த்துப் போடுகிறான் அவன் நாட்களை
கவிதை பாட என்று ஒரு காலை
அமைதி அனுபவிக்க ஒரு குளக்கரை
அயர்ந்து தூங்க ஒரு மரக்கிளை
புல்லாங்குழல் வாசிக்க ஒரு இடம்.
தச்சு வேலை செய்ய ஒரு வீடு
ஓவியம் தீட்ட சில முகங்கள்
ஆருடம் சொல்ல சில கவலைக்காரர்கள்
விளையாட சில தோழர்கள்
வஞ்சமென்றும், கோபமென்றும் பார்க்காத விரதம் இல்லை
தட்டிக் கேட்டு சண்டை பயிலவும் சில முரட்டுக் கைகள்
வளர எந்த உந்தலுமில்லை, ஆயினும்
முதிர போகும் பயணமிது
பல வாசங்கள் முகர்ந்து பார்க்க
விளையாட்டுக்கு திரியும் இளங்கன்று போல்
எல்லாமே சொந்தம்.
உறவு வளர பயமில்லை முதல் காதல் போல்
இரவெல்லாம் கண்விழித்து
புன்னகை தரிக்கிறான்.
பிரிந்த போது கண்ணீர் சிந்தி பறக்கிறான்.
எங்கோ சென்று ஏதோ செய்ய
சுதந்திரம். மண்ணில் நட்டு வைக்கவில்லை
எதையும். காற்றில் அலையும் காகிதம்.
சுகம் மட்டும் தேடும் சுகவாசி.
மிடுக்காய் அலையும் சன்னியாசி.
Wednesday, May 6, 2009
டாடி
எங்கோ யாரோ கூப்பிட்டது கேட்டு
டாடி என்றாள் என்னை.
இதிலாவது தமிழிருக்கட்டுமென்று
பலருக்கு கூறியது நினைவுக்கு வந்தும்
இரண்டரை வயது மழலை மனதில்
பாசமாய் வந்த வார்த்தை
மாற்ற மனமில்லை ...
ஆனால்,
விடுவதாயில்லை மகளே.
அப்பா அப்பா தான்.
டாடி என்றாள் என்னை.
இதிலாவது தமிழிருக்கட்டுமென்று
பலருக்கு கூறியது நினைவுக்கு வந்தும்
இரண்டரை வயது மழலை மனதில்
பாசமாய் வந்த வார்த்தை
மாற்ற மனமில்லை ...
ஆனால்,
விடுவதாயில்லை மகளே.
அப்பா அப்பா தான்.
Friday, April 24, 2009
Wednesday, February 25, 2009
கனா
இரவின் மை தாண்டிய சின்ன நிலவொளி
பாறை புல் எனப் பிரித்து உணர முடியாத நிலப்பரப்பு
கைகள் உயர்த்தி காற்றில் மிதக்கும் கனா
என்னை தழுவி காற்றில் மிதக்கும் மென்மைத் துகில்
ஒடுங்கி கீழே இறங்கி நீர் பரப்பில் கால் உந்தி
உயர எம்பி சிறகு விரித்து காற்றில் சறுக்கிப் பயணம்
இந்த நிலம் என் மனமாய், உயர்ந்து நிற்கும் மலைகள்
ஆர்பரிக்கும் கடல் என வகை வகையாய் என் நினைவுகள்.
வேகம் குறைத்து கடற்கரை மனலில் கால் பதித்து
தளர்ந்து விழுகிறேன்; சற்று முன் அடித்த பெரிய அலையின்
வேகம் வாங்கி மெல்லிய ஈரமாய் என் அடியில் நகரும் மனல்
தெளிந்த வானம், தூரத்தில் எங்கோ, பூமியோடு வானம்
இடியிட்டு சிணுங்கித் திரிகிறது.
திண்னை வயப்பட்ட கிழவன் வீசும் விசிறி வேகத்தில்
கடல் என்னை நோக்கி தண்ணீர் அலை வீசுகிறது
கையில் மனல் அள்ளி திருப்பி தளர விட,
ஒவ்வொரு துகளாய் சரிந்து விழுகிறது
மனலின் ஈரம் கொடுக்கும் உணர்ச்சி உணர்ந்து
புரண்டு படுக்கிறேன், கன்னங்களில் மனல்
குருணை உணர்ந்த, கைகள் மனல் பரப்பை வருடுகிறது
குறும்புச் சிறுவன் போல் ஒரு அலை மெல்ல
அடி எடுத்து என் பாதம் தொட்டு தனக்குள் சிரித்து
திரும்புகிறது.
என் நினைவுகள் எல்லாம் என்னை அழுத்துவது போல்
நிலத்தோடு நிழலாய் ஒட்டி கிடக்கிறேன்
எத்தனை அலைகள் அதன் பின் அடித்ததென தெரியவில்லை
அயர்ந்து மறைந்தேன்.
பாறை புல் எனப் பிரித்து உணர முடியாத நிலப்பரப்பு
கைகள் உயர்த்தி காற்றில் மிதக்கும் கனா
என்னை தழுவி காற்றில் மிதக்கும் மென்மைத் துகில்
ஒடுங்கி கீழே இறங்கி நீர் பரப்பில் கால் உந்தி
உயர எம்பி சிறகு விரித்து காற்றில் சறுக்கிப் பயணம்
இந்த நிலம் என் மனமாய், உயர்ந்து நிற்கும் மலைகள்
ஆர்பரிக்கும் கடல் என வகை வகையாய் என் நினைவுகள்.
வேகம் குறைத்து கடற்கரை மனலில் கால் பதித்து
தளர்ந்து விழுகிறேன்; சற்று முன் அடித்த பெரிய அலையின்
வேகம் வாங்கி மெல்லிய ஈரமாய் என் அடியில் நகரும் மனல்
தெளிந்த வானம், தூரத்தில் எங்கோ, பூமியோடு வானம்
இடியிட்டு சிணுங்கித் திரிகிறது.
திண்னை வயப்பட்ட கிழவன் வீசும் விசிறி வேகத்தில்
கடல் என்னை நோக்கி தண்ணீர் அலை வீசுகிறது
கையில் மனல் அள்ளி திருப்பி தளர விட,
ஒவ்வொரு துகளாய் சரிந்து விழுகிறது
மனலின் ஈரம் கொடுக்கும் உணர்ச்சி உணர்ந்து
புரண்டு படுக்கிறேன், கன்னங்களில் மனல்
குருணை உணர்ந்த, கைகள் மனல் பரப்பை வருடுகிறது
குறும்புச் சிறுவன் போல் ஒரு அலை மெல்ல
அடி எடுத்து என் பாதம் தொட்டு தனக்குள் சிரித்து
திரும்புகிறது.
என் நினைவுகள் எல்லாம் என்னை அழுத்துவது போல்
நிலத்தோடு நிழலாய் ஒட்டி கிடக்கிறேன்
எத்தனை அலைகள் அதன் பின் அடித்ததென தெரியவில்லை
அயர்ந்து மறைந்தேன்.
Tuesday, January 6, 2009
முப்பது
முழுமை.
சுதந்திரம் பொறுப்புடன்.
நான் இப்பொழுது சமுதாயம்.
சாமான்யன்.
நடுவயது.
இன்னும் இளவட்டம்.
வேலையும் செய்யும் மேலாளர்.
அப்பா.
குடும்பத் தலைவன்.
பக்கத்து வீட்டு மாமா.
இடம் பெயர்ந்த தமிழன்.
குடும்பஸ்தன்.
சம்சாரி.
சுதந்திரம் பொறுப்புடன்.
நான் இப்பொழுது சமுதாயம்.
சாமான்யன்.
நடுவயது.
இன்னும் இளவட்டம்.
வேலையும் செய்யும் மேலாளர்.
அப்பா.
குடும்பத் தலைவன்.
பக்கத்து வீட்டு மாமா.
இடம் பெயர்ந்த தமிழன்.
குடும்பஸ்தன்.
சம்சாரி.
Monday, January 5, 2009
ஆத்மா
நெஞ்சுக்குள்ளே நடுவில் ஒன்றரை அடி நீளம்,
உருண்டையாய் மேலும் கீழும் சற்று கூராய்
அநேகமாய் இருப்பது தெரியாது
ஆள் அல்ல முகம் வைத்து அடையாளம் சேர்த்து
நினைவில் கொள்ள
குணம் என்று இல்லை நல்லது கெட்டது கற்பிக்க
பரமாத்மாவின் பரிமாணமாய் இந்த ஆத்மா
இருப்பதாய் கேள்வி. அது எப்படி நானாகிறது
அழுத்தமாய் மட்டும் உணரலாம். மனது
பதறுகிறது, எதை பற்றி உய்பதென்று தவிக்கிறது.
அமைதியாய் ஆத்மா, ஜோதியாய்,
அதிக நேரம் தரிசனம் இல்லை. மனம் மீண்டும்
வெல்கிறதோ.
உருண்டையாய் மேலும் கீழும் சற்று கூராய்
அநேகமாய் இருப்பது தெரியாது
ஆள் அல்ல முகம் வைத்து அடையாளம் சேர்த்து
நினைவில் கொள்ள
குணம் என்று இல்லை நல்லது கெட்டது கற்பிக்க
பரமாத்மாவின் பரிமாணமாய் இந்த ஆத்மா
இருப்பதாய் கேள்வி. அது எப்படி நானாகிறது
அழுத்தமாய் மட்டும் உணரலாம். மனது
பதறுகிறது, எதை பற்றி உய்பதென்று தவிக்கிறது.
அமைதியாய் ஆத்மா, ஜோதியாய்,
அதிக நேரம் தரிசனம் இல்லை. மனம் மீண்டும்
வெல்கிறதோ.
Subscribe to:
Posts (Atom)