வற்றாயிருப்பு
பேரறிவு
காலம்.
கடவுளுக்கு பேரறிவு இருக்கிறது
என்றில்லை; பேரறிவு தான் கடவுள்.
காலம் தான் கடவுள்.
வற்றாயிருப்பு தான் கடவுள்.
Tuesday, December 14, 2010
Monday, December 6, 2010
Monday, November 8, 2010
தாத்தா பாட்டி
எப்போதாவது கொஞ்சம் இருமல்,
அட்டையில் தைத்த விசிறியின் காற்று
ம் ... என்று கடந்து போன ஒரு
நாழிகைக்கு அங்கீகாரம்
தரும் பெருமூச்சு.
என்று,
வீட்டின் மூலையில் அவர் குரல்
எதிரொலிக்கிறதோ !
அதே சோபாவில்
இன்றும் அமர்ந்திருக்கிறாரோ !
சலனமற்ற அமைதியில்
அந்த வீடு, பக்கத்தில் வேம்பு.
நீண்டு வளர்ந்த பெரிய
வாழ்க்கையின் சின்ன
அடையாளங்கள் அங்கொன்று
இங்கொன்றாய்.
கடிகாரம் மாட்டிய ஆணியில்
இன்று அவர் புகைப்படம்.
மலர்ந்தது, உதிர்ந்தது
என்று இரண்டு தேதிகள்.
மகன், மருமகள், பேரன், பேத்தி
கண்டு, வலய வந்த
பாட்டி மட்டும் இன்று
தாத்தா இல்லாத வீட்டில்
மீதமிருக்கும் அவர் தடையங்கள்
அனுபவிக்க வந்து போகிறார்
விருந்தாளி போல.
அழுத்தமாய் பார்க்கும்
அந்த கண்கள் இல்லாத அந்த
வீடு, இன்று வெறுமையாய்,
கனமாய்.
அட்டையில் தைத்த விசிறியின் காற்று
ம் ... என்று கடந்து போன ஒரு
நாழிகைக்கு அங்கீகாரம்
தரும் பெருமூச்சு.
என்று,
வீட்டின் மூலையில் அவர் குரல்
எதிரொலிக்கிறதோ !
அதே சோபாவில்
இன்றும் அமர்ந்திருக்கிறாரோ !
சலனமற்ற அமைதியில்
அந்த வீடு, பக்கத்தில் வேம்பு.
நீண்டு வளர்ந்த பெரிய
வாழ்க்கையின் சின்ன
அடையாளங்கள் அங்கொன்று
இங்கொன்றாய்.
கடிகாரம் மாட்டிய ஆணியில்
இன்று அவர் புகைப்படம்.
மலர்ந்தது, உதிர்ந்தது
என்று இரண்டு தேதிகள்.
மகன், மருமகள், பேரன், பேத்தி
கண்டு, வலய வந்த
பாட்டி மட்டும் இன்று
தாத்தா இல்லாத வீட்டில்
மீதமிருக்கும் அவர் தடையங்கள்
அனுபவிக்க வந்து போகிறார்
விருந்தாளி போல.
அழுத்தமாய் பார்க்கும்
அந்த கண்கள் இல்லாத அந்த
வீடு, இன்று வெறுமையாய்,
கனமாய்.
Friday, October 29, 2010
அளவுகோல்
படி, அடி, மூட்டை என அளந்து பார்த்து
வாங்கப்பட்டது வாழ்க்கை;
உருப்படி எத்தனை என்று குழந்தைகள்
கணக்கிடப்பட்டது;
தாள்களை எண்ணி மனிதனின்
தரம் பிரிக்கப்பட்டது;
தராசுகளிலும், அளவு கோளிலும் சிக்காது
நின்றன உன்னதமாய் சில உணர்வுகள்
செல்லாது, செல்லாது என்று தூர
தள்ளப்பட்டது.
சுட்டெரிக்கும் நியாயங்களுக்குள்ளும்,
"இப்ப ஆகிர செலவுக்கு ... " என்ற வாக்கிய
வட்டத்துக்குள் சிக்காதவைகள்
புரியாது போன இந்த சரக்குகள்.
தினை விதைத்து அறுவடை செய்தவர்
ஒரு புறம் இருக்க,
வினை அறுவடை செய்தவர்கள்
வியந்தார்கள், எனக்கு ஏன் இப்படி எல்லாம்
ஆச்சு என்று.
ஐயா, உங்கள் அளவுகோள்கள் பற்றி கொஞ்சம்
போசனும் ... சரி விடுங்க, இதெல்லாம் விதி.
வாங்கப்பட்டது வாழ்க்கை;
உருப்படி எத்தனை என்று குழந்தைகள்
கணக்கிடப்பட்டது;
தாள்களை எண்ணி மனிதனின்
தரம் பிரிக்கப்பட்டது;
தராசுகளிலும், அளவு கோளிலும் சிக்காது
நின்றன உன்னதமாய் சில உணர்வுகள்
செல்லாது, செல்லாது என்று தூர
தள்ளப்பட்டது.
சுட்டெரிக்கும் நியாயங்களுக்குள்ளும்,
"இப்ப ஆகிர செலவுக்கு ... " என்ற வாக்கிய
வட்டத்துக்குள் சிக்காதவைகள்
புரியாது போன இந்த சரக்குகள்.
தினை விதைத்து அறுவடை செய்தவர்
ஒரு புறம் இருக்க,
வினை அறுவடை செய்தவர்கள்
வியந்தார்கள், எனக்கு ஏன் இப்படி எல்லாம்
ஆச்சு என்று.
ஐயா, உங்கள் அளவுகோள்கள் பற்றி கொஞ்சம்
போசனும் ... சரி விடுங்க, இதெல்லாம் விதி.
Monday, September 27, 2010
துணுக்குகள்
என்னைப் போலிருப்பதாய் என் மகள்
திட்டப்பட்டாள். நான் இப்படியா இருக்கிறேன்
என்று என்னைத் திட்டிக் கொண்டேன்.
மீண்டும் நிலைநிறுத்த முயன்றேன் என்
வாழ்க்கைக்கு, யாரோ வைத்த இலக்குகள் நான்
எட்ட முடியாது போன நாளிலிருந்து.
திட்டப்பட்டாள். நான் இப்படியா இருக்கிறேன்
என்று என்னைத் திட்டிக் கொண்டேன்.
மீண்டும் நிலைநிறுத்த முயன்றேன் என்
வாழ்க்கைக்கு, யாரோ வைத்த இலக்குகள் நான்
எட்ட முடியாது போன நாளிலிருந்து.
Tuesday, June 1, 2010
தமிழ்
என் பாதம் குளிர வைக்கும் பாசிப் படிக்கட்டே
கருப்பு மீசைகள் வழுக்கைத் தலையும்
வெற்றிலை சிவந்த வாயில் தவழும் அழகே
செதுக்கி முதல் வரும் நினைப்பின் இயல்பு
பிரதிபலிப்பே.
சொல்லச் சொல்ல இனிக்கும் தமிழே
You know, I miss you.
கருப்பு மீசைகள் வழுக்கைத் தலையும்
வெற்றிலை சிவந்த வாயில் தவழும் அழகே
செதுக்கி முதல் வரும் நினைப்பின் இயல்பு
பிரதிபலிப்பே.
சொல்லச் சொல்ல இனிக்கும் தமிழே
You know, I miss you.
Wednesday, March 31, 2010
அம்மா
ம்ம்ம்மா ...
என்று குரல் எடுத்தது அந்த பொடிசு.
பையனை day-care ல் விட்டு அவசரமாய் அவன்
கண்ணிலிருந்து மறைய முயன்றாள்,
ஒட்டிய உடையில் உதட்டுச் சாயமும்
தோளில் பையுமென
அந்த நவ நாகரீக அம்மா.
அவன் அழுவது பொருக்காது
கண் சுருக்கி, முகம் வாடினாள்.
வேறு வேலையாய் அங்கே வந்திருந்த
15 பெற்றோரும் சேர்ந்து வாடினோம்.
என்று குரல் எடுத்தது அந்த பொடிசு.
பையனை day-care ல் விட்டு அவசரமாய் அவன்
கண்ணிலிருந்து மறைய முயன்றாள்,
ஒட்டிய உடையில் உதட்டுச் சாயமும்
தோளில் பையுமென
அந்த நவ நாகரீக அம்மா.
அவன் அழுவது பொருக்காது
கண் சுருக்கி, முகம் வாடினாள்.
வேறு வேலையாய் அங்கே வந்திருந்த
15 பெற்றோரும் சேர்ந்து வாடினோம்.
Saturday, February 27, 2010
அடர்த்தி
3 - 10 குடும்பங்களின் 1000 சதுர அடி மண்ணில்
120 மனிதர்கள் 300 சதுர அடி பேருந்தில்
400 மனிதர்கள் 4000 சதுர அடி திரையரங்கில்
4 மனிதர்கள் 12 சதுர அடி ஆட்டோவில்
வீட்டில், ரோட்டில், க்யூவில், நடைபாதையில்
அடுகடுக்காய் எவ்வளவு அடர்த்தியாய்
அடைக்க முடியுமோ அவ்வளவு அடர்த்தியாய்.
நேராய் அன்னாந்து பார்த்தால் சின்ன சதுரமாய்
வானம். அதில், நட்சத்திரங்களுக்குப் பதில்
குறுக்கும் நெடுக்குமாய் விமானங்கள்.
கிழக்கும் மேற்கும் புரியாத அடர்த்தியில் சுவர்கள்.
மண் எட்டாத சமதள தரைகள் கொண்ட வீடுகள்.
குளிர்ந்த கண்ணாடிகள் தாண்டி மட்டும்
அனுபவிக்கப்படும் சூரியக் கதிர்கள்
நின்ற இடத்திலேயே ஓடிப் பழக,
வியர்த்தது உடன் மறைய குளிரூட்டப்பட்ட
உடற்பயிற்ச்சி கூடங்கள்.
1000 ஏக்கர் காட்டில் வெறும் 100 பேர் மட்டும்
மண் பட கால் பதித்து ஓடித்திரிந்து வாழ்ந்ததெல்லாம்
எப்படி மறந்தோம்.
120 மனிதர்கள் 300 சதுர அடி பேருந்தில்
400 மனிதர்கள் 4000 சதுர அடி திரையரங்கில்
4 மனிதர்கள் 12 சதுர அடி ஆட்டோவில்
வீட்டில், ரோட்டில், க்யூவில், நடைபாதையில்
அடுகடுக்காய் எவ்வளவு அடர்த்தியாய்
அடைக்க முடியுமோ அவ்வளவு அடர்த்தியாய்.
நேராய் அன்னாந்து பார்த்தால் சின்ன சதுரமாய்
வானம். அதில், நட்சத்திரங்களுக்குப் பதில்
குறுக்கும் நெடுக்குமாய் விமானங்கள்.
கிழக்கும் மேற்கும் புரியாத அடர்த்தியில் சுவர்கள்.
மண் எட்டாத சமதள தரைகள் கொண்ட வீடுகள்.
குளிர்ந்த கண்ணாடிகள் தாண்டி மட்டும்
அனுபவிக்கப்படும் சூரியக் கதிர்கள்
நின்ற இடத்திலேயே ஓடிப் பழக,
வியர்த்தது உடன் மறைய குளிரூட்டப்பட்ட
உடற்பயிற்ச்சி கூடங்கள்.
1000 ஏக்கர் காட்டில் வெறும் 100 பேர் மட்டும்
மண் பட கால் பதித்து ஓடித்திரிந்து வாழ்ந்ததெல்லாம்
எப்படி மறந்தோம்.
Subscribe to:
Posts (Atom)