Wednesday, January 23, 2008

மிருகத்தின் நிழலில்

முன்னங்காலில் மானின் கழுத்து அழுத்தி தன்
பசிக்கு விருந்து கிடைத்த சுகத்தில் அந்த புலி.
மொத்தமாய் சில உணர்ச்சிகள் மட்டுமே
அதற்குத் தெரியும். அது மிருகம். சுத்தமான மிருகம்.

புலி பரிணமித்து, முன்ணிரண்டு கால்கள் தூக்கி நிர்க்க
கற்றுக்கொண்டு, இன்று மீசை முளைத்த மனிதனாய்.
பரிசுத்தமான மிருகம் இன்றும் உள்ளே இருக்க
பரிதாபமான மனிதனாய் வெளியே தெரிகிறான்.

அன்பு என்று பிதற்றி கோரைப்பல் தெரியாது சிரிக்கிறான்
நட்பு என்று வேட்டை மறந்ததாய் நடிக்கிறான்
பாசம் என்று நகம் உள்வாங்கி கை கூப்புகிறான்
உண்மை என்று வால் சுருட்டி கண் படாது வைக்கிறான்

சொடுக்கிய நேரத்தில் கண் சுருக்கி பல் காண்பித்து
வால் நீண்டு, நகம் நீட்டி மிருகம் உருமுதே.

கடைத்தெருவில், ரோட்டில், கல்லூரியில், வீட்டில்,
வேடமணிந்து கிழ்தரமாய் ஒரு மிருகம் உலவுதே.
புலி போல் பரிசுத்தமாய் மிருகம் பார்கையில்
பயமில்லை. மனித தோல் போர்த்திய மிருகம் பார்க்க
நடுங்குதே.

ஓடித்திரிந்து வேட்டையாடி, மேய்ந்து தின்று
வாழ்ந்திருந்தால் வாழ்க்கை சுகமாய் இருந்திருக்கலாம்.
தெய்வத்தை தேடும் வேஷமிட்டு, நாளுக்கு நாள்,
மிருகத்தை மட்டும் எதிர்கொள்ளும் அவலம்
இந்த மனிதனுக்கு மட்டும்.

மான்களை ஏனோ நான் அதிகம் பார்ப்பதில்லை,
முதலை, புலி, நரி, பருந்து என்று வகை வகையாய்,
திரும்பும் திசை தோரும். வெறி ஊரிப்போய்
மாமிசம் தின்று மரத்துப்போய் காட்டு ஜீவனின்
கண்கள் மட்டுமே காண்கிறேன்.

தெய்வம் என்று உண்டு என்று ஏன் பொய் சொல்கிறாய்.