Monday, November 8, 2010

தாத்தா பாட்டி

எப்போதாவது கொஞ்சம் இருமல்,
அட்டையில் தைத்த விசிறியின் காற்று
ம் ... என்று கடந்து போன ஒரு
நாழிகைக்கு அங்கீகாரம்
தரும் பெருமூச்சு.

என்று,

வீட்டின் மூலையில் அவர் குரல்
எதிரொலிக்கிறதோ !
அதே சோபாவில்
இன்றும் அமர்ந்திருக்கிறாரோ !

சலனமற்ற அமைதியில்
அந்த வீடு, பக்கத்தில் வேம்பு.
நீண்டு வளர்ந்த பெரிய
வாழ்க்கையின் சின்ன
அடையாளங்கள் அங்கொன்று
இங்கொன்றாய்.

கடிகாரம் மாட்டிய ஆணியில்
இன்று அவர் புகைப்படம்.
மலர்ந்தது, உதிர்ந்தது
என்று இரண்டு தேதிகள்.

மகன், மருமகள், பேரன், பேத்தி
கண்டு, வலய வந்த
பாட்டி மட்டும் இன்று
தாத்தா இல்லாத வீட்டில்
மீதமிருக்கும் அவர் தடையங்கள்
அனுபவிக்க வந்து போகிறார்
விருந்தாளி போல.

அழுத்தமாய் பார்க்கும்
அந்த கண்கள் இல்லாத அந்த
வீடு, இன்று வெறுமையாய்,
கனமாய்.