படி, அடி, மூட்டை என அளந்து பார்த்து
வாங்கப்பட்டது வாழ்க்கை;
உருப்படி எத்தனை என்று குழந்தைகள்
கணக்கிடப்பட்டது;
தாள்களை எண்ணி மனிதனின்
தரம் பிரிக்கப்பட்டது;
தராசுகளிலும், அளவு கோளிலும் சிக்காது
நின்றன உன்னதமாய் சில உணர்வுகள்
செல்லாது, செல்லாது என்று தூர
தள்ளப்பட்டது.
சுட்டெரிக்கும் நியாயங்களுக்குள்ளும்,
"இப்ப ஆகிர செலவுக்கு ... " என்ற வாக்கிய
வட்டத்துக்குள் சிக்காதவைகள்
புரியாது போன இந்த சரக்குகள்.
தினை விதைத்து அறுவடை செய்தவர்
ஒரு புறம் இருக்க,
வினை அறுவடை செய்தவர்கள்
வியந்தார்கள், எனக்கு ஏன் இப்படி எல்லாம்
ஆச்சு என்று.
ஐயா, உங்கள் அளவுகோள்கள் பற்றி கொஞ்சம்
போசனும் ... சரி விடுங்க, இதெல்லாம் விதி.