Wednesday, December 12, 2007

தங்க மகள்

2 அடி உயரமும் 2 கீழ் பற்களுமாய்
என் தங்க மகள்
குட்டி பொம்மைபோல் வீடெங்கும் திரிகிறாள்
ஏதோ ஞாபகம் வந்தது போல் எனை பார்த்து சிரிக்கிறாள்

கரடிக் குட்டியும் கத்தும் வாத்தும் அவள் தேசம்
கத்தும் நாய் உலக அதிசயம்
நான் கடிந்தாலும் அழுது கொண்டு என்னிடமே
ஆறுதலுக்கு வரும் பஞ்சுப் பதுமை

வார்த்தைகள் இல்லா மொழியில் ஓயாது கதைக்கிறாள்
கோபம் வந்து ஏசுகிறாள்.
உரிமையாய் தோள் ஏறி, ஒய்யாரமாய் சவாரி;
அவள் கை நீட்டிய திசையில் என் கால்கள்

சிரிப்பும், கோபமும், அழுகையும் ஆனந்தமுமாய்
அழகான குணத்தவளாய் அவளே வளர்கிறாள்
என் சிறிய வீட்டில் ராஜாங்கம் நடத்தும்
என் சிட்டுக்குருவிக்கு என் செல்ல முத்தங்கள்

Wednesday, October 3, 2007

அமைதியின் எதிர்பதம்

வேடிக்கை பாருங்கள்,

அமைதி என்று பதம் உண்டு,
எதிர் பதம் அமைதியின்மை.
அமைதியின்மை எத்தனையோ நிலைகள்
உற்சாகம், கோபம், வேகம் ...

எந்த ஒரு நிலையும் அமைதியின் எதிர் பதமே
அமைதியாய் மனதிருக்க எதிலுமே அதற்கு நாட்டமில்லை
சிரு நன்மை செய்யக்கூட சிரிதளவு கோபம் தேவை
அந்த அளவில் அதை கோபம் என்றா சொல்வோம் ?

இந்த அமைதி பழகுவது எப்படி,
கடவுளை வணங்க வரும் அமைதி,
உறவுகளின் உரசலில் அன்பு உணர ஒரு அமைதி,
நல்ல பாடல் கேட்க வரும் அமைதி,

வீட்டிற்கு அருகில் சத்தமாய் ஓடிய motor
நின்றால் நிலவும் அமைதி போல்,
மனம் என்னும் motor நிற்க தரும்
சந்தர்பத்தில் அமைதி

எந்த ஒரு உயர்ந்த உணர்வும் மனத்தை நிறுத்தும்,
பக்தி, அன்பு, கலை, காமம் ...
மனதை நிறுத்தாத எந்த உணர்வும் கிழ்தரமானதே,
இதை முக்கியப்படுத்துவதற்கோ என்னவோ,
அமைதி இல்லது இருப்பினும் பததில் அதை
நினைவுபடுத்த "அமைதி - யின்மை" என்றனர்.

சிவந்த கண்கள்; ஓங்கிய கைகள்

பார்க்கும் படம் தோரும் ஓங்கிய கோபம்
சிவந்த கண்கள் முருக்கிய முஷ்டிகள்
கண் முன் நிற்பவனை நொருக்கத் துடிக்கும் ஆக்ரோஷம்
சாய்த்து முடித்த பின் காந்தியின் வழி நடப்பவன் போல்
அன்பாய் நடப்பது பற்றி அறிவுரை

சாந்தமாய் போய் அமர்ந்தால் 3 மணி நேரத்தில்
உடம்பெல்லாம் கோபம் கிளறி வெறியேரிய அனுபவம்
கோபம் தொலைக்க கண்டவனெல்லாம் பலிகடா
கோபம் வளர மீண்டும் சினிமா மீண்டும் வெறி

ஒட்டுமொத்தமாய் இருப்பவனெல்லாம் கோபத்தில்
யார் மீது எதற்காக என்று தெரியாமல்;

மனதினுள் சுதந்திரம், எண்ணத்தில் சுதந்திரம்
வளர்ப்பது எளிதல்ல; முதிராத மனம் இன்று
ரவுத்திரம் மட்டுமே பழகுகிறான். கோபத்தின்
அடிமை எப்படி சுதந்திர மனிதன் ஆக முடியும்

கோபம் எனும் போதை தெளிய,
மீண்டும் மீண்டும் பார்க்கச்சொல்லும் சினிமா
சுகத்தை வெளியே தேடாது தன்னுள்ளே
தேட மனிதனுக்கு சொல்லிதரலாமே

வாழ்க்கையில் உழலும் மனிதன், 3 மணி நேரம்
துன்பத்தை கடக்க கற்றுக் கொள்ள வேண்டும்
கவலை, வருத்தம், கோபம், சந்தோஷம், சாந்தம
என எதையும் உள்ளே சென்று தொலைத்து
சிறு பொறியாய் கோபம் வாங்கி வருகிறோம்,
கோபம் கொண்டு சென்று சாந்தம் வாங்குவது
எப்போது.

Monday, August 13, 2007

என் கவிதை IPO

பதித்த வார்த்தை நான் படிக்க மட்டும்;
கொதித்த நெஞ்சை கொட்டி தீர்க்க
வதைத்த நினைவை கசக்கி வீச
புதைத்த புதையலாய் என் கவிதைகள்

யாரிடமும் சொல்லாத ரகசியம்
இன்னும் அழகாகிடுமோ !

இல்லை,

ஊரிடம் உரைக்காத கவிதை
நான் படிக்க மட்டும் என்றால்;
உன்னிடம் வார்த்தை வாங்காது
நான் வளராது போவேனோ

என்னை இடிக்கப் பிறக்கும் கவிதை
அதைத் தீட்டப் பிறக்கும் உன் வார்த்தை
தீட்டு ...
என் தீட்டுப் போக தீட்டு.

Monday, June 11, 2007

கவிதை கேளுங்கள்

சின்னதாய் பூ பூக்கும் சோலையில்
சிறு குழந்தையாய் விளையாடும் என் மனசு
லேசான வெயிலில் மர நிழலில் இளைப்பார
வாயாட நண்பர் கூட்டம்

பொழுது ஏறி வெப்பம் ஏற
பன்னீரென தண்ணீரில் ஆட்டம்
வேப்பங்காத்து தலை உலர்த்த
சுகமாய் சாய்ந்தபடி ஆயா கையிலிருந்து
தயிர் சாதம்

நீஞ்சிய சுகம் போக நித்திரை
மாலை பொழுதில் மயில் தோகை போல்
ஒரு சங்கீதம். புல்லாங்குழலின் வருடல்.
ஆழ்ந்து அங்கே கரைகின்ற தவம்

பேச்சே தேவையில்லாத நித்திய சுகம்.
இது சுகம் சுகம் சுகம்.

Monday, April 9, 2007

பணப் பசி

வயிறு பசிக்குது என்று உணவு சாப்பிட்டு வந்தேன்,
வினோதமாய் ஒரு பசி நாளுக்கு நாள் அதிகரிக்குதே;
கையில் அள்ளி வாயில் போட்டு தீரும் பசி அல்ல
கையில் வாங்கி பையில் போடும் பசி.

தாள் தாளாய் பெட்டியில் பதுக்கும் பசி,
எண்ணி எண்ணிப் பார்த்து புல்லரிக்கும் பசி,
100 தான் இருக்குது என்று தெரிந்தும் அதை தொடும்
உணர்ச்சிக்காக திரும்ப திரும்ப என்னிப் பார்க்க
வைக்கும் இது தீர்க்கவே முடியாத பசி.

நாளை வாழ்வு சந்தோஷமாய் இருக்க வேண்டும்
அதற்கு இன்று கஷ்டப்பட வேண்டும் என்று
மனதே தன்னை உர்ச்சாகபடுத்திக்கொள்ள
இன்றிலிருந்தே அனுபவிக்க தொடங்கலாம் என்று
மறக்க வைக்கும் ஒரு பசி

தேவை இருக்கோ இல்லையோ அதை
அடைந்தே ஆகவேண்டும் என்று வெறியில்
தினமும் நிம்மதி மறக்க வைக்கும் ஒரு பசி

Friday, February 9, 2007

தலையணை சுகம்

சின்னதாய் வசதியாய் ஒரு தலையணை
சுழன்று ஓடி திரியும் தலையை தாங்க ஒரு குட்டி மெத்தை
நாள் முழுதும் ஓடித் திரிந்த மனிதன் தனக்கே
கொடுத்துக்கொள்ளும் சொகுசுப் பரிசு

யோசித்துப் பார்த்தாயா நீ செய்யும் ஒவ்வொரு வேலையும்
அந்த சின்ன தலையணையில் சொகுசாய் தலை வைக்க
எத்தனை சுகமிருந்து என்ன நிம்மதியாய் தலை சாய்க்க
ஒரு தலையணை கூட இல்லாமல்.

பேராசையாய் சேர்த்து வைத்து சொத்தெல்லாம் பெட்டியில்
பத்திரம் என்று சந்தோசமாய் சாய ஒரு தலையணை
வாங்கி வைத்த சதுர நிலத்தில் யாரும் இன்று குடிசை
போடவில்லை என்று நிம்மதியாய் சாய ஒரு தலையணை
பத்து சில்லரை இன்று சாமர்த்தியமாய் மிச்சம் செய்த
சாதுர்யத்தை மெச்சி சாய ஒரு தலையணை
இழுத்து பிடித்த வியாபரத்தில் முகம் சுழித்த எதிராளி
விட்டுக்கொடுத்த காசில் வெற்றியாய் சாய ஒரு தலையணை
பாவமாய் நின்ற பிச்சைக்கார கிழவனுக்கு பத்து காசு
கொடுத்ததாய் பரோபகார ராஜாவுக்கு ஒரு தலையணை

தூக்கம் வந்ததோ இல்லையோ
தலையணையில் சாய்கின்றா அந்த நேரம் தான்
அந்த நாள் வெற்றியா இல்லை
வழக்கமான தோல்வியா என்று தெரியும்.

எத்தனையோ நேரம் இருந்தும் தலை சாயும் பொழுதில் தான்
நான் இன்று உண்மையிலேயே சாதித்தது சாதனையா என்று விளங்கும்
ஏமாற்ற நினைத்தவனின் முகம் போக மறுக்கும்
மிரட்டிச் சென்றவனின் கண் மரைய மறுக்கும்
அடி பட்டவனின் வலி சற்றுப் புரியும்
பாசம் காட்டிய நெஞ்சத்தின் மென்மை புரியும்
பார்த்து வணங்காது வந்த கடவுளின் கரம் தெரியும்

நாளை மீண்டும் படை எடுத்து வரும்
ஒவ்வொரு நிகழ்ச்சியும் திரும்ப என்று,
நினைவே சோர்வு தர தலையணை துணியில்
தலை அழுத்தி திரும்பி படுத்து மயக்கமாய் தூங்க
மனம் நாடும்.

சிரிது சிரிதாய் தன்மையில் கெடும் என் வாழ்க்கை
நாளையேனும் சின்னதாய் ஒரு ஏற்றம் காணாதா என்று
ஒரு வேண்டலில்,
நாளை பொழுது நல்லதாய் விடியும்,
நாளை கிடைக்கும் நல்ல சுகம் என்று,
நாளைய தலையணை சுகத்தை எண்ணி
இன்று தலை சாய்கிறேன் ...