Wednesday, October 3, 2007

அமைதியின் எதிர்பதம்

வேடிக்கை பாருங்கள்,

அமைதி என்று பதம் உண்டு,
எதிர் பதம் அமைதியின்மை.
அமைதியின்மை எத்தனையோ நிலைகள்
உற்சாகம், கோபம், வேகம் ...

எந்த ஒரு நிலையும் அமைதியின் எதிர் பதமே
அமைதியாய் மனதிருக்க எதிலுமே அதற்கு நாட்டமில்லை
சிரு நன்மை செய்யக்கூட சிரிதளவு கோபம் தேவை
அந்த அளவில் அதை கோபம் என்றா சொல்வோம் ?

இந்த அமைதி பழகுவது எப்படி,
கடவுளை வணங்க வரும் அமைதி,
உறவுகளின் உரசலில் அன்பு உணர ஒரு அமைதி,
நல்ல பாடல் கேட்க வரும் அமைதி,

வீட்டிற்கு அருகில் சத்தமாய் ஓடிய motor
நின்றால் நிலவும் அமைதி போல்,
மனம் என்னும் motor நிற்க தரும்
சந்தர்பத்தில் அமைதி

எந்த ஒரு உயர்ந்த உணர்வும் மனத்தை நிறுத்தும்,
பக்தி, அன்பு, கலை, காமம் ...
மனதை நிறுத்தாத எந்த உணர்வும் கிழ்தரமானதே,
இதை முக்கியப்படுத்துவதற்கோ என்னவோ,
அமைதி இல்லது இருப்பினும் பததில் அதை
நினைவுபடுத்த "அமைதி - யின்மை" என்றனர்.

சிவந்த கண்கள்; ஓங்கிய கைகள்

பார்க்கும் படம் தோரும் ஓங்கிய கோபம்
சிவந்த கண்கள் முருக்கிய முஷ்டிகள்
கண் முன் நிற்பவனை நொருக்கத் துடிக்கும் ஆக்ரோஷம்
சாய்த்து முடித்த பின் காந்தியின் வழி நடப்பவன் போல்
அன்பாய் நடப்பது பற்றி அறிவுரை

சாந்தமாய் போய் அமர்ந்தால் 3 மணி நேரத்தில்
உடம்பெல்லாம் கோபம் கிளறி வெறியேரிய அனுபவம்
கோபம் தொலைக்க கண்டவனெல்லாம் பலிகடா
கோபம் வளர மீண்டும் சினிமா மீண்டும் வெறி

ஒட்டுமொத்தமாய் இருப்பவனெல்லாம் கோபத்தில்
யார் மீது எதற்காக என்று தெரியாமல்;

மனதினுள் சுதந்திரம், எண்ணத்தில் சுதந்திரம்
வளர்ப்பது எளிதல்ல; முதிராத மனம் இன்று
ரவுத்திரம் மட்டுமே பழகுகிறான். கோபத்தின்
அடிமை எப்படி சுதந்திர மனிதன் ஆக முடியும்

கோபம் எனும் போதை தெளிய,
மீண்டும் மீண்டும் பார்க்கச்சொல்லும் சினிமா
சுகத்தை வெளியே தேடாது தன்னுள்ளே
தேட மனிதனுக்கு சொல்லிதரலாமே

வாழ்க்கையில் உழலும் மனிதன், 3 மணி நேரம்
துன்பத்தை கடக்க கற்றுக் கொள்ள வேண்டும்
கவலை, வருத்தம், கோபம், சந்தோஷம், சாந்தம
என எதையும் உள்ளே சென்று தொலைத்து
சிறு பொறியாய் கோபம் வாங்கி வருகிறோம்,
கோபம் கொண்டு சென்று சாந்தம் வாங்குவது
எப்போது.