Wednesday, October 7, 2009

நீ ஊருக்குப் போ

... என்று அதட்டினாள் அழுது
அடம் பிடித்தவளைப் பார்த்து.
சாப்பிட, தூங்க, சட்டை போட என்று
ஒவ்வொரு முறையும் குறும்புக்கு இதே
மிரட்டலாய் சொல்லப்பட்டது.

நான்கு சுவர் தாண்டி ஓடி விளையாடட்டும்
பாவம், அவளுக்கு இங்க என்ன செய்யனும்னே
தெரியலை என்று காரணம் காட்டப்பட்டது.

பயணச்சீட்டு, கூட்ட நெரிசல் என, எல்லாம்
யோசித்து, நாள் குறித்தாயிற்று.
யார் எங்கே எப்போது பார்த்துக் கொள்ள
வேண்டுமென்று அட்டவனையிட்டு அறிவித்தாயிற்று.

குறித்த நாளுக்கு முன்னிரவு.
ஏங்க அவளை அனுப்பித்தான் ஆகனுமா ...
என்று இழுத்தாள், மகளைப் பிரிய முடியாமல்.

No comments: