Thursday, April 15, 2021

அவளில்லாத சில வருடங்கள்

சில வருடங்களாய்ப் பஞ்சம்
சில வருடங்களாயிற்று அவள் பிரிந்து
சில வருடங்களாய் ஈரமில்லை
சில வருடங்களாய் இல்லை என்னிடம் பெண்மை

அவள்: கவிதை.
நான்: வெற்றுக் காகிதச் சொந்தக்காரன்.

அம்மாயி (அம்மாவின் அம்மா)

நான்: என்னம்மா பன்றீங்க
அம்மா: ஊர்ல தான் இருக்கேன்
நான்: அன்னையர் தின வாழ்த்துக்கள்
அம்மா: எத்தனை தடவ அன்னையர் தினம் வரும்
நான்: இன்னைக்குதான் மா அன்னையர் தினம்
அம்மா: சரி எல்லாம் நல்லா இருகீங்களா
நான்: ம்ம்ம்
அம்மா: அஞ்சு நாளா இங்க இருக்கேன். அம்மாயி அப்படியே தான் இருக்காங்க
நான்: ம்ம்ம்
அம்மா: இப்ப கொஞ்சம் பரவாயில்லை. பேசறது தான் புரியலை.
நான்: ம்ம்ம்
அம்மா: அம்மாயி ...
நான்: ம்ம்ம்
அம்மா: அம்மாயி ...
நான்: ம்ம்ம்
அம்மா: அம்மாயி ...
நான்: ம்ம்ம்

20 நிமிடங்கள்.

அம்மா: அம்மாயி ...
நான்: ம்ம்ம்
அம்மா: அம்மாயி ...
நான்: ம்ம்ம்