Monday, December 18, 2006

poetry

school ல படிக்கும்போது poetry னா என்னான்னு definition குடுத்தாங்க.
spontaneous overflow of feelings.

சமீபமா படிச்ச ஒரு அழகான definition
That which can be said can be said through prose. How will you say that which cannot be said if you don't have poetry? It is the language of what cannot really be said, that language that you speak so as not to have to be completely silent, the language of emotion and ecstasy.
- Osho on Zen, The Art of Enlightenment, Fusion Books.

Tuesday, July 18, 2006

எழுத்து நடை

தமிழ் ஒவ்வொருக்கும் ஒவ்வொரு நடையில் வருவது பார்க்க படிக்க ஆவலைத் தூண்டுகிறது. சாதரணமாக குமுதம் ஆனந்த விகடன் போன்றவற்றில் இருக்கும் நடை எனக்கு வெகு காலமாக பிடிக்கவில்லை. எனக்கு தெரிந்தவர்கள் பலர் அதை மிகவும் சிரத்தை எடுத்துக்கொண்டு விடாமல் படிப்பது எனக்கு இன்னும் விந்தையாகவே இருக்கிறது. என் நண்பன் சொல்லுவான் ஒரு வாரம் அதை எடுத்துப் படிக்கும் போது எதாவது ஒரு பொறி தட்டும். எதாவது ஒரு விஷயம் புதிதாய் இருகும், புதிதாய் நம்மை சிந்திக்க வைக்கும் என்பான். நான் அடிக்கடி அது போல் ஆங்கில படங்களில் காண்பதுண்டு. சில சமயம் நான் திரையரங்கை விட்டு வரும்போது உள்ளே போனதை விட அதிகம் பிரகசமாக உர்ச்சாகமாக வருவதுண்டு. ஏதோ நான் இந்த ஊரில் உள்ளவர்கள் வகுத்த விதியை மீரி சாதனைகள் செய்ய முடியும் என்பது போல் ஒரு உர்ச்சாகம் பிறக்கும்.

தமிழ் நடையில் எனக்கு மிகவும் பிடித்தது பாலகுமாரனின் நடை. மிகவும் எளிய வரிகள், மிகவுமே குறைந்த சொற்க்களைக் கொண்டு பெரிய கருத்துக்களை எளிதாக கையாள்வது தான் அவரின் சிரப்பு. சரித்திர நாவல் எழுதும் பலர் அந்த சரித்திர காலதிற்கே சென்று எவ்வளவு முடியுமோ அவ்வளவு நீளமான வரிகளை கொண்டு எழுதுகிறர்கள். ஒரு வரி முடியும் பொழுது நம் மனதில் இருக்கும் அந்த கருத்து பாதி மறைந்து எளிமையாக படிக்க விடாமல் தடுப்பதாகவே அமைகிறது.

அதிகம் எழுதாமல் சில முக்கியமான காரணங்களால் எழுத வேண்டிய சூழ்நிலையில் நான் கவிதை எழுதவே முனைகிறேன். கவிதையில் நான் சொல்ல வந்ததை நான் நினைத்த அளவுக்கு உணர்த்த முடியகிறது. சில எளிய சொற்களை வைத்துகொண்டு ஒரு கவிதையின் முடிவில் படிப்பவரின் நெஞ்சை வருடிய நிறைவு கிடைக்கிறதே.

Finding Forrster என்ற ஆங்கிலப்படத்தில் ஒரு முதிர்ந்த எழுத்தாளர் சொல்லுவார், keep punching the keys, for gods sake keep punching the keys. You don't need to think just punch the keys. எந்த தடையும் இல்லாமல் அப்படி எழுதும்போது உங்களுக்கு என்ன நடை வருகிறதோ அதுவே உங்கள் நடை.

Wednesday, June 21, 2006

யுவன் சங்கர் ராஜா

எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும்
அத்தனை கண்ட பின்னும் பூமி இன்னும் பூ பூக்கும்;

உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்திருப்போம்
எரிமலை வந்தால் கூட ஏறி நின்று போர் தொடுப்போம்;

Tuesday, June 20, 2006

தமிழில் blogging செய்வது எப்படி / How to Write Blogs in Tamil

தமிழில் blog எழுதுவது மிகவும் எளிது. நீங்கள் English ல் எவ்வளவு எளிதாக எழுதுகிறீர்களோ அதே போல் தமிழிலும் எழுத முடியும். தமிழில் எழுத பின் வரும் மூன்று விஷயங்களை கவனிக்க வேண்டும்.
Please take care of the following three aspects to start blogging in Tamil.

1. தமிழ் font

Windows XP போன்ற OS களில் எற்கனவே தமிழ் font நிறுவப்பட்டிருக்கும். இந்த blog உங்களுக்கு தமிழில் சரியாகத் தெரிந்தால் போதும்.

1. Tamil font

Windows XP has a default Tamil font installed. If you can see this blog properly in Tamil then you are done. If not then please find a Unicode Tamil font and install it. It shouldn't be that hard to find one using Google.

2. தமிழில் எழுத ekalappai

Google ல் ekalappai என்று தேடி அதை முதலில் install செய்து கொள்ளவும். இது எந்த editor/input box லும் தமிழில் எழுத உதவும் ஒரு software. இதன் மூலம் நீங்கள் blog ல் post create செய்யும் போது தமிழில் எழுதலாம்.

3. blog template மாற்றங்கள்

சில blog template களில் இருக்கும் stylesheet களால் firefox browser ல் தமிழ் வார்த்தைகள் சரியாகத் தெரிவதில்லை. பின் வருவது blog ன் title க்கு உண்டான stylesheet. இதில் நீங்கள் கடைசியில் உள்ள letter-spacing என்ற entry ஐ நீக்க வேண்டும்.

#blog-title {
margin:5px 5px 0;
padding:20px 20px .25em;
border:1px solid #eee;
border-width:1px 1px 0;
font-size:200%;
line-height:1.2em;
font-weight:normal;
color:#666;
text-transform:uppercase;
letter-spacing:.2em;
}

பின் வரும் style sheet entries
letter-spacing
text-align: justify / left / right

blog ல் தமிழ் வார்தைகள் சரியகத் தெரியாமல் இருக்க முக்கியக் காரணங்கால். இவைகளை நீக்கினால் எல்லா browser களிலும் தமிழை சரியாகக் காண முடியும். blog ன் எந்த பகுதி சரியாகத் தெரியவில்லையோ அதற்கு உண்டான stylesheet ஐ ஆரய்ந்தால் எளிதில் சரி செய்து விட முடியும்.

Monday, May 29, 2006

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சிறகு விரிக்க கற்ற காலத்தில்
தோளோடு தோள் சேர்ந்து பறந்த
என் தோழமைக்கு வணக்கம்:

இன்று ஊர் மாறி பறந்து வந்து
வெவ்வேறு காட்டில் வெவ்வேறு கூட்டில்
வசதியாய் இறுக்கிறோம்

பொழுது சாய்கையில், அமைதியாய் அமர்கையில்
மனது மீண்டும் அந்த
தோழமையின் தோள் வேண்டுதடா
சுயமாய் பறக்கக் கற்ற அந்த காற்று வேண்டுதடா

என் பிரிய நண்பா
நீ உன் கூடு உடைத்து உலகம் பார்த்த நாளில்
உன்னை மனமார வாழ்த்துகிறேன்
நீ
இன்னும் உயரமாய் பறக்க
இன்னும் சுகமாய் சிரிக்க

அன்புடன்,
மதன்.