முடிந்து போன ஒரு தலைமுறை
படிப்படியாய் கற்றுத் தருகிறது
முதலில் வார்த்தைகள் கொண்டு
பிறகு மெளணமாய்.
முதுமை, தளர்ச்சி
வளப்பமாய் இருந்த கைகள்
சுருக்கங்கள் உருவாகி
கயிற்றுக் கட்டில், விசிறி
பழைய நினைவுகள் என்று
வாழ்க்கை ஒயும் நேரம்
அருகிலிருந்து
பார்பது அவசியம்.
நாளை எனக்கு நடக்க இருப்பது
கண் முன்.
என்னை விட நல்லவனாய்
என்னை விட கடின உழைப்பென
வாழ்ந்த உயிருக்கு இதெல்லாம்.
நான் இன்னும் முயற்சிக்க
அடுத்தவருக்காய் அதிகம் யோசிக்க
செய்ய வேண்டியது
நிறைய இருக்க,
அதிகமில்லை நாட்கள்
காலன், வெற்று வானமும்,
தனிமை சாபமும் வைத்து
சிரித்துக் காத்திருக்கிறான்.
என்னை காக்கும் கடவுள்
நான் என் முன்னோர் போல
வாழ்ந்து காட்ட துணை நில்.
சக்தி கொடு.