Monday, August 18, 2008

freewill - destiny/புத்தி - விதி

நீ இத்தனை நொடிகள் தான் வாழ்வாய்;
இந்த நேரத்தில் இங்கிருக்க வேண்டும்,
இதைதான் நினைப்பாய், இவளைத்தான் மணப்பாய்
நீயே தான் செய்தாய் என்று நினைத்தாலும்
விதித்தது நடக்கிறது என்று ஒரு கருத்து

இது destiny - விதி.

ஒவ்வொரு நொடியும் என் கையில்,
ஒவ்வொரு செயலும் என் செயல்,
என் எண்ணம், என் திட்டம்.
நான் போகும் பயணம் நான் வகுத்த பாதையில்.
விதிக்கு இங்கு இடமில்லை. நான் வளைத்தால்
காலம் வளையும்.

இது புத்தி - freewill.

உண்மை இரண்டுக்கும் நடுவில்.
வினையின் பயன் உன் முன் நிற்கும் விதி,
விதியின் உத்வேகம் மீறி நீ செய்யும் செயல்
நீ ஆளும் புத்தி.

புத்தி கொண்டு நீ இன்று செய்யும் வினை நாளை உன் விதி.
நாளைய விதி உன் கையில் இன்று புத்தியாய்.

எதிர்நோக்கும் ஒவ்வொரு நொடியும் நீ செய்த வினையால்
மட்டுமென்று அமர்ந்திருக்க முடியாது
நீ இன்னாருடைய பையன், இவருடைய பேரன்,
உன் நட்சத்திரம், நாள், உணவு, இடம் ...
விதி நீ பயின்ற கணக்கில்லை. புத்தி கொண்டு
புரிவதற்குமில்லை.

உன் கையில் இருப்பது நீ இன்று செய்யும் வினை
மட்டும். விதைப்பது திணையென்றால், விதி மீதென்ன பயம்.