Monday, June 11, 2007

கவிதை கேளுங்கள்

சின்னதாய் பூ பூக்கும் சோலையில்
சிறு குழந்தையாய் விளையாடும் என் மனசு
லேசான வெயிலில் மர நிழலில் இளைப்பார
வாயாட நண்பர் கூட்டம்

பொழுது ஏறி வெப்பம் ஏற
பன்னீரென தண்ணீரில் ஆட்டம்
வேப்பங்காத்து தலை உலர்த்த
சுகமாய் சாய்ந்தபடி ஆயா கையிலிருந்து
தயிர் சாதம்

நீஞ்சிய சுகம் போக நித்திரை
மாலை பொழுதில் மயில் தோகை போல்
ஒரு சங்கீதம். புல்லாங்குழலின் வருடல்.
ஆழ்ந்து அங்கே கரைகின்ற தவம்

பேச்சே தேவையில்லாத நித்திய சுகம்.
இது சுகம் சுகம் சுகம்.