வாடிக்கையாய் நடந்து வரும் வீதிகள்; கடைப் பலகைகளின் கரைகள் கூட நன்கு பரிச்சயமாய் தோண்றும் என் நகர். இன்று எதுவும் மாற்றமில்லை, சற்று அழுக்கான என் ஷு, ஒரு முரையோ இரு முரையோ போட்ட சட்டை, காலை பேப்பர், எல்லாமே. நடை பாதையில் கால்களின் தாளத்தை பார்த்த படி வெற்று மனதுடன் நடந்திருப்பேன். வியர்த்த அளவு வைத்துப் பார்த்தால் 2 கி.மி இருக்கும். எங்கிருகிறேன் என்று புரியவில்லை, வீடு செல்லும் வழி தெரியவில்லை.
மகன், மருமகள், அம்முவின் பெயர்கள் தவிர வேறு எதுவும் நினைவில் தட்டவில்லை. ஏதோ மெயின் ஏதோ கிராஸ் என்று வரும். உச்சி வெயிலில் கிழக்கு மேற்கு பார்க்க முடியவில்லை. நகரம் முழுவதும், சாப்பிட்ட களைப்பில் லேசான மந்தமாய், சாலைகளில் அவ்வளவு சலசலபில்லை. நான் இப்பொழுது பயப்பட வேண்டுமா ?
அதோ அந்த திருப்பம் தாண்டினால் மெயின் ரோடு வரலாம். கால்களின் தாளம் லேசாய் வேகமாகக் கண்டேன். இபோழுது வியர்வைக்கும் நடந்த தூரத்திற்கும் தொடர்பு இல்லை. திருப்பம் தொட்டு வலப்பக்கம் முட்டுச் சந்து, இடப்பக்கம் இதே போல் எங்கோ பாதை வெகு சிரத்தையாய் கொண்டு செல்கிறது.
தொலைந்து விட்டேன். தொலைத்து விட்டேன்.
கடைப் பலகையின் கரைகள் என்னை பார்த்து சிரிப்பது போல். அம்மு குட்டி மாதிரி. எல்லா இடங்களிலும் அவை ஒரே மாதிரி தான் இருக்கின்றன. கண்கள் பரிச்சயமான வடிவம் எதாவது கிடைக்குமா என்று தேடுகிறது.
ஒரு கடையின் வாசற்படியில் அமர்கிறேன். லேசாய் பதற்றம் மனதில், நிற்க முடியவில்லை. சட்டென்று கண் மூடி வீட்டில் என் ஆசை சாய்வு நாற்காலியில் விழித்துக் கொள்ள மாட்டோமா.
எழுந்து நடந்தேன், சில திருப்பங்கள் தாண்டி, சில பலகைகள் தாண்டி, பலரின் கை காட்டலுக்கு இனங்கி, இன்னும் தொலந்து தான் போயிருக்கிறேன். பதற்றம் குறைந்து விட்டது, சற்று கவலை கால் வைக்கிறது.
கடந்து போகிறவர்கள் எல்லாம், இன்று ஏனோ வெகு அன்னியமாய். எல்லா மனிதர்களின் முகத்திலும் ஒரே உணர்ச்சி. உணர்ச்சியற்ற உணர்ச்சி. சர் சரென்று வாகனங்கள் ஏதே அவசரத்தில். நெற்றியில் கை கொடுத்து தலை மயிர் கால்களை இழுத்துப் பார்கிறேன். தொலைந்து விட்டாயே.
அயிரமாயிரம் மக்களுக்கு நடுவே நான் தனியாய். பாதுகாப்பாய் தோண்றும் பொது ஜனம் இன்று பயமுறுத்தும் தோற்றங்களாய். ஷுவில் ஏதோ பட்டு விட்டது, வீடு சென்றதும் துவைத்துப் போட வேண்டும். வீடு !
புரியாத மொழியில் எழுத்துக்கள், பெயர் பலகைகள், பேருந்துப் பலகைகள், தெருப் பலகைகள். உதவ வரும் மனிதர்கள் சிலர் கோபம் கொள்கிறார்கள். என் நினைவு தெளிவாய் இல்லையே. கையிலிருக்கும் பத்து ரூபாய் போதுமே நான் வீடு சென்றிருப்பேன். அந்த நகர் பெயர் மட்டும் எட்ட மறுக்கிறது. வயது தந்த பரிசு மறதி, தளர்ச்சி.
கால்கள் இன்னும் கொஞச தூரம் நடக்கும். அதன் பின். வயிற்றின் கோரிக்கையை ஏற்று, 7 ரூபாய் செலவு செய்கிறேன். அம்முவுக்கு ஒரு மிட்டாய் வாங்கலாமா. கையில் இருக்கும் இரண்டு நாணயங்கள் என்னை பரிதாபமாய் பார்ப்பதாய்.
இந்த மனிதர்கள், பரிச்சயமில்லாது, கடினமாய், நகரத்தை செலுத்திக் கொண்டு. நகரம் ஒன்றும் புதிதில்லை. ஆனால் இன்று என் பார்வையில் அனைவரும் புதியவராய். 15 நிமிடங்களாய் பக்கத்தில் அமர்ந்து உண்ணும் சக மனிதனை கவனிக்காத ஒரு பழக்கம். என் வேலை. என் உணவு. என் பாதை. அதுவும் 2 அடி மட்டும்.