நெஞ்சுக்குள்ளே நடுவில் ஒன்றரை அடி நீளம்,
உருண்டையாய் மேலும் கீழும் சற்று கூராய்
அநேகமாய் இருப்பது தெரியாது
ஆள் அல்ல முகம் வைத்து அடையாளம் சேர்த்து
நினைவில் கொள்ள
குணம் என்று இல்லை நல்லது கெட்டது கற்பிக்க
பரமாத்மாவின் பரிமாணமாய் இந்த ஆத்மா
இருப்பதாய் கேள்வி. அது எப்படி நானாகிறது
அழுத்தமாய் மட்டும் உணரலாம். மனது
பதறுகிறது, எதை பற்றி உய்பதென்று தவிக்கிறது.
அமைதியாய் ஆத்மா, ஜோதியாய்,
அதிக நேரம் தரிசனம் இல்லை. மனம் மீண்டும்
வெல்கிறதோ.
No comments:
Post a Comment