தமிழ் ஒவ்வொருக்கும் ஒவ்வொரு நடையில் வருவது பார்க்க படிக்க ஆவலைத் தூண்டுகிறது. சாதரணமாக குமுதம் ஆனந்த விகடன் போன்றவற்றில் இருக்கும் நடை எனக்கு வெகு காலமாக பிடிக்கவில்லை. எனக்கு தெரிந்தவர்கள் பலர் அதை மிகவும் சிரத்தை எடுத்துக்கொண்டு விடாமல் படிப்பது எனக்கு இன்னும் விந்தையாகவே இருக்கிறது. என் நண்பன் சொல்லுவான் ஒரு வாரம் அதை எடுத்துப் படிக்கும் போது எதாவது ஒரு பொறி தட்டும். எதாவது ஒரு விஷயம் புதிதாய் இருகும், புதிதாய் நம்மை சிந்திக்க வைக்கும் என்பான். நான் அடிக்கடி அது போல் ஆங்கில படங்களில் காண்பதுண்டு. சில சமயம் நான் திரையரங்கை விட்டு வரும்போது உள்ளே போனதை விட அதிகம் பிரகசமாக உர்ச்சாகமாக வருவதுண்டு. ஏதோ நான் இந்த ஊரில் உள்ளவர்கள் வகுத்த விதியை மீரி சாதனைகள் செய்ய முடியும் என்பது போல் ஒரு உர்ச்சாகம் பிறக்கும்.
தமிழ் நடையில் எனக்கு மிகவும் பிடித்தது பாலகுமாரனின் நடை. மிகவும் எளிய வரிகள், மிகவுமே குறைந்த சொற்க்களைக் கொண்டு பெரிய கருத்துக்களை எளிதாக கையாள்வது தான் அவரின் சிரப்பு. சரித்திர நாவல் எழுதும் பலர் அந்த சரித்திர காலதிற்கே சென்று எவ்வளவு முடியுமோ அவ்வளவு நீளமான வரிகளை கொண்டு எழுதுகிறர்கள். ஒரு வரி முடியும் பொழுது நம் மனதில் இருக்கும் அந்த கருத்து பாதி மறைந்து எளிமையாக படிக்க விடாமல் தடுப்பதாகவே அமைகிறது.
அதிகம் எழுதாமல் சில முக்கியமான காரணங்களால் எழுத வேண்டிய சூழ்நிலையில் நான் கவிதை எழுதவே முனைகிறேன். கவிதையில் நான் சொல்ல வந்ததை நான் நினைத்த அளவுக்கு உணர்த்த முடியகிறது. சில எளிய சொற்களை வைத்துகொண்டு ஒரு கவிதையின் முடிவில் படிப்பவரின் நெஞ்சை வருடிய நிறைவு கிடைக்கிறதே.
Finding Forrster என்ற ஆங்கிலப்படத்தில் ஒரு முதிர்ந்த எழுத்தாளர் சொல்லுவார், keep punching the keys, for gods sake keep punching the keys. You don't need to think just punch the keys. எந்த தடையும் இல்லாமல் அப்படி எழுதும்போது உங்களுக்கு என்ன நடை வருகிறதோ அதுவே உங்கள் நடை.