Wednesday, April 27, 2011

பேருந்து Cellphone ஜன்னல்

Cellphone இடுக்குகளில் சிக்கியிருந்த
செய்திகளை எல்லாம் ஒவ்வொன்றாய்
படித்து முடித்தாயிற்று.

தேய்த்துத் தேய்த்து
அதன் திரை கைரேகைகள் அனைத்தும்
வாங்கிக் கொண்டது.

காதலியின் குரல் கேட்காத சில
நிமிடங்கள் அவளின்
குறுஞ்செய்திகளில் கழிந்தது.

சொல்ல ஏதுமில்லாது தவித்த
நேரத்தில் அருகிலிருந்தவன்
இருமல் விஷயமாயிற்று.

அழுக்குப் படிந்த ஜன்னலில்
வழிந்த மழைநீர்
முத்துக்களாய் பளபளத்தது.

கண்ணில் பட்டதெல்லாம்
புணிதமாயிற்று
காதலின் ஆசியினால்
Cellphone நினைவில்
அழிவிலாது வாழலாயிற்று.

தலை இருக்கையில் சாய்த்து
கண்கள் சொருகி
தூக்கமும் கனவும் மாறி மாறி
கடந்து போனது.

விழித்து கண்ட கனவில் அவளையும்,
மயங்கிக் கண்ட கனவில் Cellphoneயும்
மாறி மாறிக் கொஞ்சினேன்.

எனக்கு அழிவில்லை

விட்டு விட்டு இருமிக் கொண்டிருந்தேன் நான்.
பேருந்தில் அருகிலிந்தவன் அவன் காதலிக்கு
அனுப்பிய SMS காதல் கவிதைகளில்
நான் கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும்.