வேடிக்கை பாருங்கள்,
அமைதி என்று பதம் உண்டு,
எதிர் பதம் அமைதியின்மை.
அமைதியின்மை எத்தனையோ நிலைகள்
உற்சாகம், கோபம், வேகம் ...
எந்த ஒரு நிலையும் அமைதியின் எதிர் பதமே
அமைதியாய் மனதிருக்க எதிலுமே அதற்கு நாட்டமில்லை
சிரு நன்மை செய்யக்கூட சிரிதளவு கோபம் தேவை
அந்த அளவில் அதை கோபம் என்றா சொல்வோம் ?
இந்த அமைதி பழகுவது எப்படி,
கடவுளை வணங்க வரும் அமைதி,
உறவுகளின் உரசலில் அன்பு உணர ஒரு அமைதி,
நல்ல பாடல் கேட்க வரும் அமைதி,
வீட்டிற்கு அருகில் சத்தமாய் ஓடிய motor
நின்றால் நிலவும் அமைதி போல்,
மனம் என்னும் motor நிற்க தரும்
சந்தர்பத்தில் அமைதி
எந்த ஒரு உயர்ந்த உணர்வும் மனத்தை நிறுத்தும்,
பக்தி, அன்பு, கலை, காமம் ...
மனதை நிறுத்தாத எந்த உணர்வும் கிழ்தரமானதே,
இதை முக்கியப்படுத்துவதற்கோ என்னவோ,
அமைதி இல்லது இருப்பினும் பததில் அதை
நினைவுபடுத்த "அமைதி - யின்மை" என்றனர்.
No comments:
Post a Comment