Monday, August 13, 2007

என் கவிதை IPO

பதித்த வார்த்தை நான் படிக்க மட்டும்;
கொதித்த நெஞ்சை கொட்டி தீர்க்க
வதைத்த நினைவை கசக்கி வீச
புதைத்த புதையலாய் என் கவிதைகள்

யாரிடமும் சொல்லாத ரகசியம்
இன்னும் அழகாகிடுமோ !

இல்லை,

ஊரிடம் உரைக்காத கவிதை
நான் படிக்க மட்டும் என்றால்;
உன்னிடம் வார்த்தை வாங்காது
நான் வளராது போவேனோ

என்னை இடிக்கப் பிறக்கும் கவிதை
அதைத் தீட்டப் பிறக்கும் உன் வார்த்தை
தீட்டு ...
என் தீட்டுப் போக தீட்டு.

No comments: