வயிறு பசிக்குது என்று உணவு சாப்பிட்டு வந்தேன்,
வினோதமாய் ஒரு பசி நாளுக்கு நாள் அதிகரிக்குதே;
கையில் அள்ளி வாயில் போட்டு தீரும் பசி அல்ல
கையில் வாங்கி பையில் போடும் பசி.
தாள் தாளாய் பெட்டியில் பதுக்கும் பசி,
எண்ணி எண்ணிப் பார்த்து புல்லரிக்கும் பசி,
100 தான் இருக்குது என்று தெரிந்தும் அதை தொடும்
உணர்ச்சிக்காக திரும்ப திரும்ப என்னிப் பார்க்க
வைக்கும் இது தீர்க்கவே முடியாத பசி.
நாளை வாழ்வு சந்தோஷமாய் இருக்க வேண்டும்
அதற்கு இன்று கஷ்டப்பட வேண்டும் என்று
மனதே தன்னை உர்ச்சாகபடுத்திக்கொள்ள
இன்றிலிருந்தே அனுபவிக்க தொடங்கலாம் என்று
மறக்க வைக்கும் ஒரு பசி
தேவை இருக்கோ இல்லையோ அதை
அடைந்தே ஆகவேண்டும் என்று வெறியில்
தினமும் நிம்மதி மறக்க வைக்கும் ஒரு பசி
No comments:
Post a Comment