Friday, February 9, 2007

தலையணை சுகம்

சின்னதாய் வசதியாய் ஒரு தலையணை
சுழன்று ஓடி திரியும் தலையை தாங்க ஒரு குட்டி மெத்தை
நாள் முழுதும் ஓடித் திரிந்த மனிதன் தனக்கே
கொடுத்துக்கொள்ளும் சொகுசுப் பரிசு

யோசித்துப் பார்த்தாயா நீ செய்யும் ஒவ்வொரு வேலையும்
அந்த சின்ன தலையணையில் சொகுசாய் தலை வைக்க
எத்தனை சுகமிருந்து என்ன நிம்மதியாய் தலை சாய்க்க
ஒரு தலையணை கூட இல்லாமல்.

பேராசையாய் சேர்த்து வைத்து சொத்தெல்லாம் பெட்டியில்
பத்திரம் என்று சந்தோசமாய் சாய ஒரு தலையணை
வாங்கி வைத்த சதுர நிலத்தில் யாரும் இன்று குடிசை
போடவில்லை என்று நிம்மதியாய் சாய ஒரு தலையணை
பத்து சில்லரை இன்று சாமர்த்தியமாய் மிச்சம் செய்த
சாதுர்யத்தை மெச்சி சாய ஒரு தலையணை
இழுத்து பிடித்த வியாபரத்தில் முகம் சுழித்த எதிராளி
விட்டுக்கொடுத்த காசில் வெற்றியாய் சாய ஒரு தலையணை
பாவமாய் நின்ற பிச்சைக்கார கிழவனுக்கு பத்து காசு
கொடுத்ததாய் பரோபகார ராஜாவுக்கு ஒரு தலையணை

தூக்கம் வந்ததோ இல்லையோ
தலையணையில் சாய்கின்றா அந்த நேரம் தான்
அந்த நாள் வெற்றியா இல்லை
வழக்கமான தோல்வியா என்று தெரியும்.

எத்தனையோ நேரம் இருந்தும் தலை சாயும் பொழுதில் தான்
நான் இன்று உண்மையிலேயே சாதித்தது சாதனையா என்று விளங்கும்
ஏமாற்ற நினைத்தவனின் முகம் போக மறுக்கும்
மிரட்டிச் சென்றவனின் கண் மரைய மறுக்கும்
அடி பட்டவனின் வலி சற்றுப் புரியும்
பாசம் காட்டிய நெஞ்சத்தின் மென்மை புரியும்
பார்த்து வணங்காது வந்த கடவுளின் கரம் தெரியும்

நாளை மீண்டும் படை எடுத்து வரும்
ஒவ்வொரு நிகழ்ச்சியும் திரும்ப என்று,
நினைவே சோர்வு தர தலையணை துணியில்
தலை அழுத்தி திரும்பி படுத்து மயக்கமாய் தூங்க
மனம் நாடும்.

சிரிது சிரிதாய் தன்மையில் கெடும் என் வாழ்க்கை
நாளையேனும் சின்னதாய் ஒரு ஏற்றம் காணாதா என்று
ஒரு வேண்டலில்,
நாளை பொழுது நல்லதாய் விடியும்,
நாளை கிடைக்கும் நல்ல சுகம் என்று,
நாளைய தலையணை சுகத்தை எண்ணி
இன்று தலை சாய்கிறேன் ...

1 comment:

Mouna said...

kavinjanin sinthanai thoodiyathu athe thalaiyani thano?