ம்ம்ம்மா ...
என்று குரல் எடுத்தது அந்த பொடிசு.
பையனை day-care ல் விட்டு அவசரமாய் அவன்
கண்ணிலிருந்து மறைய முயன்றாள்,
ஒட்டிய உடையில் உதட்டுச் சாயமும்
தோளில் பையுமென
அந்த நவ நாகரீக அம்மா.
அவன் அழுவது பொருக்காது
கண் சுருக்கி, முகம் வாடினாள்.
வேறு வேலையாய் அங்கே வந்திருந்த
15 பெற்றோரும் சேர்ந்து வாடினோம்.
No comments:
Post a Comment