காலை மலர்ந்தது தாயே
குளிர்ந்து மயங்கிய கண்கள்
விழித்து தீர்கம் காண சக்தி கொடு
அயர்ந்து மூடிய காதுகள்
மனம் சிதறாது செயல்புரிய
வேண்டாத சத்தங்கள்
எட்டாதிருக்க சக்தி கொடு
சுருக்கங்கள் ஏறாது என்
நெற்றி நினைவு சிதறாது
சிந்திக்க சக்தி கொடு
எட்ட முடியா நிலை தொட
அயராது உழைக்கும்
அசையாத சிந்தை கொடு
தொலை தூரம் நெடுங்காலம்
நிலைக்கும், பலர் உளம்
குளிரும் காரியம் மட்டும்
செய்ய, நல்லது செய்தான்,
நன்கிருக்கட்டும் என்று
தொட்டவரெல்லாம் வாழ்த
என் புகழ் ஓங்க சக்தி கொடு
உற்றவரெல்லாம் மனமகிழ
குடும்பம் செழிக்க
பிள்ளைகள் மனம் பதமாய்
வளர, எனக்கு சக்தி மிக
வேண்டும்.
பரிபூரணமாய் எனக்கு அருள்
புரி தாயே !
No comments:
Post a Comment