நிலம் கீறி வாசம் பார்த்தேன்,
நிமிர்ந்து தொடு வானத்தில்
அனிவகுக்கும் மலைகள் பார்த்தேன்
என் கண் படாது கிடக்கும் நிலத்தில் எல்லாம்
கால் வைக்க ஏக்கம் கொண்டேன்
விரிந்து கிடக்கும் கோரைப்புல் வெளி
அடர்ந்து குளிரும் அந்தக் கானகமும்
வெள்ளிப் பிரளயமாய் அருவியும்
நீர் வற்றி வரண்ட பாலையும் கண்டு
வர நினைத்தேன்
தனி மனிதனாய் ஏதுமில்லா உலகில்
கிடைக்குமா இந்த சுகம் இன்று
கரை தாண்டி நடக்கும் செய்தி
காதில் சேர தொலைக்காட்சி வேண்டாம்
நான் வாழும் பூமி நான் வருடி பழக
விரும்புகிறேன்; மந்தை கூட்டம் மிகுந்த
மனித வாடை இல்லா அந்த புனித பூமி
எனக்கு காணக் கிடைக்குமா.
ஆண் மகன் எனக்கு ஆவின் வேரில்
கண் மறைந்த ஒன்றை வென்று வருவதே
சொல்ல முடியா இன்பம் புரிகிறதா உனக்கு;
("There will be blood", படம் தந்த ஏக்கம்)
No comments:
Post a Comment