அறையின் மூலையில் கண் பதித்து
கனவு கண்ட காலம் அது
என் மனம் போகும் பாதை சரியா என்று
புரியாத வயதது.
காலையின் எழுந்து எங்காவது சென்று எதையாவது
பயின்று வருவது என்ற வாடிக்கை மட்டுமே பார்த்த பருவம்.
இன்று நாற்காலியின் வடும்பில் தலை சாய்த்து
கண் முன் தெரியும் கூரையில் ஆயிரம் கனவுகள்
பிரதிபலிக்கிறேன், வேகமாய், மிக வேகமாய்
காட்சிகள் மாற, பல யோசனைகள், யுத்திகள்.
கட்டுக்கடங்காது சித்திரங்கள் வளர்ந்தும் எதை
செய்ய எதை தள்ள என்று எங்கோ ஒரு முதிர்ச்சி
வளர்ந்ததாய் ஒரு தன்நம்பிக்கை.
சொல் பேச்சு மட்டும் கேட்டு வந்த சிறுபிள்ளை மனம்
தானாய் கால் நீட்டி, நடை பயிலக் கற்றது காண்கிறேன்
தள்ளாட சட்டென்று நீட்டிப் பிடிக்க, சாய்ந்து அழ,
இன்னும் சில கைகள், தோள்கள் தேடிய போதும்,
எங்கோ ஏதோ ஒரு திர்க்கம்.
முரட்டு தான்-தோண்றித்தனம், சற்று கைக்கு அடங்கியதாய்.
மீசை முளைத்ததை தடவிய வயதுக்கு இன்று போய்
என்னையே சந்தித்து, ஒரு செய்தி சொல்ல ஆசை.
எதிர்காலம் உனக்கு மிகுந்த சுகம்,
நீ கண்ட கனவுகள் நனவாகும், நீ சந்தேகத்துடன்
பயின்ற சில உணர்வுகள் மட்டுமே நாளை உன்னை
கைதூக்கும். தலை கோதி அந்த சிறுவனின்
களங்கமில்லாத கண் பார்த்து நெற்றியில் முத்தமிட்டு
சொல்ல ஆசை.
நீ நடக்க கற்றுக் கொள்வாய், உன் அமைதி இன்னும்
ஆழமாகும், உன் மனம் கரையும் நிமிடங்கள் வரும்.
நீ வைக்கும் அடி சரி. எடுத்து வை, நானிருக்கிறேன்.
No comments:
Post a Comment